இஃப்தார் விருந்து

இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தென் சேனை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த ஏப்ரல் 17 ம் தேதி, சமூக நல்லிணக்க இஃப்த்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இதில் பிற  மத சகோதர-சகோதரிகள், இஸ்லாமிய சகோதரர்கள்  மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை  மாவட்ட செயலாளர் லாக் நகர் யூசுப்,சேப்பாக்கம் கிளை நிர்வாகிகள் அமின் ஷெரீப், பொருளாளர் உமர் ,சேப்பாக்கம் அபுதாகிர், திருவல்லிக்கேணி அபுதாகிர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதில் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர்,துணை பொது செயலாளர் முஹம்மது ஷிப்லி, மாநிலச்  செயலாளர்கள்  அபூ பைசல், இனாயத்துல்லாஹ், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக  மூத்த ஊடகவியலாளர் தோழர் TSS மணி , மீனவ அமைப்புகளை சார்ந்த தோழர். கபடி மாறன், தோழர் மகேஷ்,தமிழ் நாடு மீனவர் மக்கள் சங்கத்தின் தலைவர்  ஜெ.கோசுமணி, தமிழ் நாடு திரைபடப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் நிறுவனர்/ தலைவர்  கவிஞர். தமிழ் அமுதன்,கவிஞர் அக்கினி பாரதி மற்றும் ஆர்.கே. கோல்ட் ஹவுஸ் குழுமத்தின் தலைவர் மொகிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். கவிஞர். மோகன கிருஷ்ணன் நபிகள் நாயகம் (ஸல் ) குறித்து தான் எழுதிய  அழகான கவிதையை பாடினார்.
நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட தலைவர் சிக்கந்தர்,துணை தலைவர் அபுதாகிர், துணை செயலாளர் ஆழ்வை ஜாகிர் மற்றும் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வட சென்னை மாவட்ட செயலாளர் நகர் அப்துல் ஹமீது  நோன்பு குறித்து சிற்றுரை ஆற்றினார்.

இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பிற  மத சகோதரர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வெளியீடான திருகுர்ஆன் தமிழாக்கப் பிரதிகளை  மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.


































 

Comments

Post a Comment