சிங்காரவேலர் விருது வழங்கும் விழா
19/03/2022 மாலை நொச்சிக்குப்பத்தில் சிங்காரவேலர்திடலில் நடந்த நிகழ்வில் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு சிங்காரவேலர் விருது வழங்கப்பட்டது.விழாவுக்குத் தலைமை தாங்கினார் தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத்தின் தலைவர் ஜெ.கோசுமணி
விழாவில் ஜீவரத்தினம் விருது புலவர் பா.வீரமணி அவர்களுக்கும்
வள்ளல் ந.சீமான் செல்வராஜ் விருது
அசோகா சுப்பிரமணி அவர்களுக்கும்
சின்னாண்டி பக்தர் விருது
ராஜாளி பக்தன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
விருதாளர்கள் அறிமுக உரையை
க.செ.ஆ.தேசிங் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சி நெறியாளராக
கவிஞர் தமிழ் அமுதன் இருந்தார்
சாகித்திய அகாதமி விருதாளர்
ஜோடி குருஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வின் தொடக்கத்தில்
பெப்சி கானாதாஸ் அவர்களின் சிங்காரவேலர் பற்றிய பாடல்களின் கச்சேரி நடைபெற்றது.
பிறகு கவிஞர் கடலாய் தலைமையில் கவியரங்கம்.
கவிஞர் கு.தென்னவன்
கவிஞர் சுதந்திரதாஸ்
கவிஞர் அ.இசை
கவிஞர் புரட்சிக் கானல்
கவிஞர் பழமொழி பாலன்
கவிஞர் அக்கினி பாரதி
கவிஞர் பாக்கி
கவிஞர் கற்பகம்
கவிஞர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் கவிதை பாடினர்.
Comments
Post a Comment