மடைமாற்றம் செய்தவர்
ஒரு வழிப்பாதை என்னுடையது. என் கவிதை நதியின் கடைசித் துளி கடலை சென்று அடைவதாகத்தான் இருந்தது.
எனக்குள் ஓடிக்கொண்டிருந்த நதியில் இறங்கி அதை பல்வேறு மடைகளாக வெட்டிவிட்டு என் திறமைகளை பல்வேறு திசைகளில் மடைமாற்றம் செய்தவர் கவிஞர் தமிழமுதன் அவர்கள்
அது கட்டுரையாளராக, கதாசிரியராக, பின்னணிப் பாடகராக, என்னை பயணிக்க வைத்து அதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தவர் கவிஞர் தமிழமுதன் அவர்கள்.
நான் எழுதி என்னையே பாட வைத்து, கவிஞர் தமிழமுதன் அவர்களின் தலைமையில் யோசன்பால்கி அவர்கள் வெளியிட இயக்குனர் சரவணன் அவர்களால் பெற்றுக்
கொள்ளப்பட்ட அந்த ஆல்பம் பாடல் தற்போது சேரன்மாதேவி அறக்கட்டளையின் சார்பாக, முதல் பரிசை பெற்றிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதோ அது உங்கள் பார்வைக்கு... முனைவர் பழமொழி பாலன்
Comments
Post a Comment