இடம் இல்லை
உலகத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்ப ஏவுகணை விடுவதும்   ராக்கட்டுகளை கண்டுபிடுத்து விண்ணில் விடுகிற நம் தேசத்தின் மக்கள் தொகை 120 கோடி அதிலே 25 கோடி பேருக்கு போதிய அளவு ஊட்டச்சத்து உணவின்றி தவிப்பதாக அமெரிக்க ஆராய்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது. இது இந்திய மக்களை அழ்ந்த வருத்தத்திற்கு  அழைத்து செல்லக் கூடிய ஒரு தகவல்.
         
            அதே நேரத்தில் உணவு தனியங்களின் கை இருப்பு கடந்த ஆண்டை விட
அதிகமாக இருக்கிறது என்றும் அதை சேமித்து வைக்க போதுமான் இடம் இல்லை என்றும் தகவல் வெளியாகி  உள்ளது. இது அதை விட அழ்ந்த வருத்திற்கு அழைத்த செல்லக்கூடிய இன்னொரு தகவல்.
            அதனால் பல கோடி ரூபாய் நம் தேசத்திற்கு இழப்புகள் ஏற்பட்டு வருகிறது .இது குறித்து பல்வேறு தலைவர்களும் நீதியரசர்களும் கருத்துக்களை கூறி இருந்தும் பீராஜ் பட்நாயக் அவர்கள் கூறிய கருத்து என் மனதை மிகவும் பதித்து விட்டது .
                                   "உணவு தானியங்களை சேமித்து வைக்க இடம் போதவில்லை.உணவு தானியங்களை சேமித்துவைக்கக்கூடிய சிறந்த இடம் பசியால் வாடும் மக்களின் வயிறுதான்"
                            அழ்ந்த வருதத்தை இதைவிட எப்படி பதிவு செய்து  விட முடியும் மேற்கண்ட செய்திகளைவிட இவர் சொன்ன விதம் எல்லார் ம்னதையும் .கலங்கடித்துவிடுகிறது .

Comments