கவிதை

 கவிதை 

வாசிப்பை 
நிறுத்திவிட்டார் வாசு .

கிடாரின்
இரும்பு நரம்புகளில் 
ரத்ததைப்பாய்ச்சியவரின் 
ரத்த நாளம் வெடித்துவிட்டது இன்று. .

இசையில் ஆரம்பித்து 
இசையிலேயே 
மூழ்கியவர் அவர்.

வாசிப்பதில் சுருதி பேதம் 
இருந்திருக்கலாம் 
பழகியதில் பேதம் 
காட்டியதில்லை அவர்.

கிடார் மீது 
உயிரையே வைத்திருந்தார் ,
கிடரோடுதான் 
உயிர் பிரிந்தது.

முதல் முறையாக 
ஒரு குழந்தையை 
தொலைத்துவிட்டு 
அனாதையாய் நிற்கிறது 
ஒரு கிடார் .  

(வாசு என் நண்பர் கச்சேரிக்கு வாசிகக சென்றவர் பயிற்சி 
செய்யும் போது மூளை நரம்பு வெடித்து இறந்து விட்டார் 
அவர் நினைவாக )



                                                                                                                                                                  
















ரத்தத்தை paich


Comments

Post a Comment